கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அல் உம்மா இயக்க தலைவர் மறைவு - யார் இந்த பாஷா?
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் கோவையில் நேற்று உயிரிழந்தார்.
![கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அல் உம்மா இயக்க தலைவர் மறைவு - யார் இந்த பாஷா?](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/12/17/xlarge/1343580.jpg)
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் கோவையில் நேற்று உயிரிழந்தார்.
கோவை தெற்கு உக்கடம், பொன் விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவராக இவர் இருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் எஸ்.ஏ.பாஷா அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த சமயங்களில் வயோதிகம் காரணமாக உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானார்.